அநுராதபுரம் – கெகிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் இருவர் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து இன்று முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களின் களஞ்சியசாலையிலேயே மேற்படி விபத்து ஏற்பட்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.