மட்டக்களப்பில் 21 குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை காஞ்சரங்குடாய் பிரதேசத்தில் 21 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள வயல் வெளி ஒன்றிலிருந்து இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

போர்க்காலத்தில் இந்த குண்டுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 

You May also like