அடுத்த வாரமளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தும்படி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவினால் இந்த முறைப்பாடு இன்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றை தேர்தல் நலனுக்காக மேற்கொள்ள சதி செய்து வருவதாக முறைப்பாட்டில் கூறப்படுகிறது.