நாடாளுமன்றிற்கு வந்தார் ரஞ்ஜன் ராமநாயக்க(PHOTOS)

சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் பிரசன்னமாகியுள்ளார்.

நீதிபதிகள், நடிகைகள் உட்பட பலருடனும் தொலைபேசி அழைப்புகளில் கலந்துரையாடி அவற்றைப் பதிவுசெய்து களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நிலையில் ரஞ்ஜன் ராமநாயக்கவினால் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் அவை தற்போது சமூக வலைத்தளங்களில் அம்பலமாகி வருகின்றன.

இதனால் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை, முன்னாள் நீதிபதிகள் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாமல் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகைதந்துள்ளார்.

You May also like