பொலிஸ்மா அதிபருக்கு கொரோனா சந்தேகம்-தனிமைப்படுத்தப்பட்டார்

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மற்றும் அவர் தலைமையிலான பணிக்குழுலினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் தொடக்கம் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இதன் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாகாப்புச் சபைக் கூட்டத்திலும் பொலிஸ்மா அதிபர் பங்கேற்கவில்லை.

பொலிஸ்மா அதிபரின் வாகன சாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You May also like