பொதுத்தேர்தல் குறித்து சஜித் அதிரடி முடிவு; ரணில் பச்சைக்கொடி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதற்கான அனுமதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்க உத்தேசித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான பேச்சினை முன்னாள் பிரதமர் ரணிலிடம் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் வெற்றிடமாக உள்ள அம்பந்தோட்டை மாவட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளுக்கான நபர்களை தெரிவி செய்யும் பேச்சுக்களும் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May also like