ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றை தலைவராக தெரிவாகும் நபருக்கே வழங்க அக்கட்சி உயர்பீடம் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அடுத்தவாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூடுகிறது.
இதன்போது இவ்விரு பதவிகளுக்கும் பொருத்தமான ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, ருவன் விஜேவர்தன என பலரும் கட்சித் தலைவர் பதவிக்காக விருப்பம் கோரியிருக்கின்றனர்.