இல்ஙகையின் பல்வேறு பிரதேசங்களிலும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை நீக்குவதா அல்லது தொடர்வதா என்பது கறித்து நாளை சனிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ஊரடங்கு உத்தரவினை மீண்டும் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.