களுத்துறை – பேருவளை பிரதேசத்திலிருந்து தப்பித்து வாத்துவ பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் நேற்று இரவில் கைது செய்தனர்.
33 வயதுடைய குறித்த நபருக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம் காணப்பட்டது.
எனினும் அவர் பேருவளை – ஹெட்டிமுல்ல பிரதேசத்திலிருந்து சுகாதார அதிகாரிகளின் கண்களுக்குத் தென்படாமல் வாத்துவ பகுதிக்கு சென்று தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
சந்தேக நபர் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.